சித்தர்கள் கூறிய தொப்புளின் மகத்துவங்கள்

நம்மை ஈன்ற தாயிடம் இருந்து நமக்கு கிடைத்த மிகப்பெரிய ஈடு இணை இல்லாத பரிசு மற்றும் நமக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் இதன் மூலம் கண்டிப்பாக நிச்சயமாக தீர்வு உண்டு என்றால் அது ஒவ்வொரு மனிதனின் தொப்புள்தான்.

இன்று பல்வேறு விதங்களில் முன்னேறியுள்ள அறிவியலின் கூற்றுப்படி நாம் கருவில் இருக்கும் பொழுதே முதல் முதலாக நம் உயிரினுள் ஏற்பட்ட ஒரு இணைப்பு இந்த தொப்புள் கொடி.

சித்தர்கள் கூறிய தொப்புளின் மகத்துவங்கள்

காய்ச்சல் வகைகளும் அதற்கான மருந்துகளும் பகுதி -1

நம்முடைய உடலும் உயிரும் வளர்ந்து இந்த உலகத்திற்கு வருவதற்கு முதல் காரணமானது,  நமது கருப்பையில் இருந்து நம்முடைய தாய்க்கு தொடர்பு ஏற்படுத்தியது இந்த தொப்புள் கொடி தான்.

அந்த தொப்புள் கொடியில் மறைந்துள்ள அதிசயங்களும் ஆச்சரியங்களும் எண்ணற்றவை.

தொப்புளின் மகத்துவங்கள்

இக்கால அறிவியல் கூற்றின்படி ஒரு மனிதன் இறந்த பின்பும் அடுத்து மூன்று மணி நேரத்திற்கு சூடாகவே இருக்கக்கூடிய ஒரே இடம் தொப்புள் தான்.

இந்தத் தொப்புள் ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சரியாக நடுவில் அமைந்து, அதனைச் சுற்றி உள்ள அனைத்து நாளங்களும் சேரும் ஒரு இடமாக விளங்குகிறது

இந்த தொப்புளில் உடம்பில் உள்ள 72 ஆயிரம் நாளங்கள் வந்து சேர்கின்றன.

ஆக ஒரு மனிதனுடைய உடலில் தேவையான அனைத்தும் சரியான நேரத்தில் இயங்குவதற்கான ஒரு மையப் புள்ளியாக இந்தத் தொப்புள் உள்ளது.

காய்ச்சல் மருந்து பகுதி -2: வாத உடல் காய்ச்சல்

தொப்புளும் எண்ணையும்

நமக்கு மிக சாதாரணமாக ஏற்படக்கூடிய கண் எரிச்சல், கண் பார்வை குறைபாடு, சிறுநீரகக் கல், பித்தப்பை பிரச்சனை, கால் பாத எரிச்சல், மூட்டு வலி, முழங்கால் வலி, குதிங்கால் வலி, சோர்வுறுதல், தோல் பிரச்சனைகள், தலைமுடி வளர்ச்சியில் பிரச்சனைகள் போன்ற பலவிதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது இந்த தொப்புளும் எண்ணெய் வைத்தியமும்.

யார் செய்யலாம்?

ஒரு வயது முதல் எந்த வயதினரும் இந்த கை வைத்தியத்தை தாராளமாக பின்பற்றலாம். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

எப்பொழுது செய்யலாம்?

தொப்புளில் எண்ணெய் விடுவதை  பொதுவாக இளைப்பாறும் நேரமான மதியம் அல்லது இரவு செய்வது நல்லது. இரவு தூங்கப்போகும் முன் செய்வதே வழக்கம்.

வாரத்திற்கு ஓரிரு முறை செய்யலாம்.

எப்படி செய்யலாம்?

  • இரவு தூங்கச் செல்லும் முன் தொப்புளில் எண்ணெய் விட்டு நன்கு தேய்த்து விடுவதால் நம் உடம்பில் உள்ள அனைத்து நாளங்களுக்கும் ரத்த ஓட்டம் சீராக சென்று பல பிரச்சினைகளுக்கும் இது ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.
  • எந்த ஒரு பின்விளைவுகளும் ஏற்படாது.
  • தொப்புளில் எண்ணெய் விட்டு அதை சிறிது நேரம் அப்படியே விட்டால் மட்டுமே இது பலன் தரும்.

நன்மைகள்

தொப்புளில் என்னை சிறிது சொட்டுக்கள் விட்டு தொப்புளை சுற்றி தேய்த்து விடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பல.

  1. முழங்கால் வலிக்கு இரவு தூங்கச் செல்லும் முன் தொப்புளில் மூன்று சொட்டு ஆமணக்கு எண்ணெயை விட்டு அதனை ஆள்காட்டி விரலால் சிறிது தேய்த்து விட்டால் முழங்கால் வலி காணாமல் போய்விடும்
  2. மூட்டு வலி, சோம்பல், தோல் வியாதி போன்றவற்றிற்கு கடுகு எண்ணெயில் மூன்று துளி தொப்புளில் விட்டு அதனை ஆட்காட்டி விரலால் நன்கு தேய்த்து விட்டால் வெகு விரைவில் அந்தப் பிரச்சினை இல்லாமல் போய்விடும்.
  3. பொதுவாக அனைத்து உடற்பிரச்சனைக்கும் தீர்வாக தேங்காய் எண்ணெய் அல்லது நெய் மூன்று துளி தொப்புளில் விட்டு  தேய்த்து விட்டால் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும்.
  4. குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் மற்றும் வயிற்று வலி அல்லது வெளிக்கு போகாமல் இருத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தொப்புளில் எண்ணெய் விட்டு சிறிது அழுந்த தேய்ப்பதால் அந்தப் பிரச்சனை சரியாகிவிடும்.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook 

 

Share This Article

Related Post

Different types of Millets and their Benefits

Millets and their Benefits Carbohydrates are the basis...

Importance of Persistence

Persistence – Important for Achieving G

Persistence - Tips and importance of staying persistent...

COVID – Basic Care and Information

COVID-19 CARE AND NEEDED INFORMATION Today the most po...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)