மூட்டுகளின் வாய
மூலிகை அறிமுகம்: மூட...
இவ்வகை நோய்க்கு தங்களின் சிகிச்சையைத் தொடர்வதோடு, தங்களின் சுய பராமரிப்புக்காக சில நடவடிக்கைகளும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
1. தேக பராமரிப்பு மிகவும் அவசியம். தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த சத்தான, ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும். தேவையான கூடுதல் சத்துக்கள் மற்றும் உடற்பயிற்சி பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
2. மற்றவர்களுடன் அதிகம் தொடர்பில் இருங்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவானது தங்களது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களிருந்து விடுபடவும், தங்களுக்குள்ளாகவே நல்லுணர்வு அல்லது புத்துணர்வு ஏற்பட உதவும்.
3. பிறர் தூண்டுதல்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நமது உடம்பின் தன்மைக்கு முரணாக சமூக ஊடகங்களில் காண்பிக்கப்படும் பிம்பங்களை நீடித்து நினைவில் நிறுத்திக் கொள்ளக்கூடாது. அடிக்கடி எடை மற்றும் கண்ணாடி பார்த்தல் விட்டு விலகி இருத்தல் நல்லது. சோர்வு, வெறுமை போன்ற உணர்வுகள் மிதமிஞ்சி உண்ணுவதை தூண்டினால், அவைகளை போக்க ஆரோக்கியமான வழிகளை கண்டறிந்து பின்பற்ற வேண்டும். மனநல ஆலோசனை பெறுதல் நலம்.
இதனால் தான் புலிமியா உண்டாகிறது என்று வரையறுக்க முடியாத நிலையில், நாம் நம் சிறு மற்றும் பதின்ம வயது குழந்தைகளுக்கு தம் உடல், உணவு மற்றும் ஆரோக்கியம் பற்றிய தெளிவா புரிதலை கொடுத்தல் அவசியம். சில வழிகள் இதோ.
1. அடிக்கடி குடும்பத்துடன் சேர்ந்து உண்ணுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
2. உங்கள் குழந்தைகளிடம் அவர்களின் எடையைப் பற்றி பேசாதீர்கள். மாறாக ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பற்றி பேசுங்கள். ஆரோக்கியமான உண்மையான உடற் கூறுகள் பற்றி எடுத்துரையுங்கள்.
3. ஆவல் மிகுதியால் அல்லது ருசிக்காக அதிகம் உண்ணும் பழக்கத்தை தவிர்க்க அறிவுறுத்துங்கள்.
இன்னும் நிறைய செய்திகள் சொல்லப்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் நம் நாடு, நம் ஊர் அளவில் உண்மையா என்று தெரியவில்லை. உளவியல் நூல்கள் பெரும்பாலும், மேற்கத்திய அறிஞர்கள் ஆசிரியர்கள் எழுதியவைதான் இங்கும் படிக்கப்படுகின்றன.
M.Sc. 1. Yoga 2. Varma and Thokkanam Science 3. Memory Dev and Psycho Neurobics
P.G.Diploma in Pancha Karma Therapy
Diploma in Acupuncture