புதிய சுவையில் வ
புதிய சுவையில் ஜூஸ் ...
ஆண்டாண்டு காலமாக நமது மண்ணில் விளைகின்ற உடலுக்கு மிகவும் உயிர்சத்துக்கள் தரக்கூடிய கீரை வகைகளில் முக்கியமான ஒன்று மணத்தக்காளி கீரை. ஆனால், காலமாற்றத்தினால் இன்று மிகவும் குறைவாகவே அறியப்படுகிறது, உண்ணப்படுகிறது.
வெளி உணவு, காரமான உணவு மற்றும் ரசாயனங்களால் வளர்க்கப்பட்ட பயிர்கள் ஆகியவற்றின் காரணமாக வயிற்று புண் மற்றும் செரிமான பிரச்சனைகள் மக்களிடையே பெருகி வருகின்றன. இதை வழக்கமாக உண்டு வர, பல உடல் குறிப்பாக வயிறு மற்றும் செரிமான பிரச்சனைகள் வராமல் இருக்க பெருமளவு உதவுகிறது.
மணத்தக்காளி கீரை சட்னி செய்வது எப்படி என பார்ப்போம்.
மணத்தக்காளி கீரை – 1 கைப்பிடி
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
தேங்காய் துருவல் – 1 கப்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – அரை பழம்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
புளி – சிறிய நெல்லி அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
குறிப்பு – மண் சட்டியில் வதக்கி, அம்மியில் அரைத்து சாப்பிட இன்னும் சுவை மற்றும் அதிக நலனும்.
1 Comment