Early Puberty in Girls – Why and How to Avo
Menarche - Early Puberty in Girls – Causes, Problems ...
பூப்பெய்திய குழந்தைகளுக்கு உடல் வலுவாக இருக்க கடைபிடிக்க வேண்டிய உணவு மற்றும் கை மருத்துவக் குறிப்புகள்.
பெண் குழந்தைகள் 9 வயதிலிருந்து 14 வயதிற்குள் பூப்பெய்தி விடுகிறார்கள். ஆதலால் அவர்களுக்கு சத்துள்ள உணவுகள் கொடுத்து அவர்களுடைய எலும்பு மற்றும் உடலை வலுவாக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாது அந்த வயதில் ஏற்படும் சிற்சில பிரச்சனைகளுக்கும், கருப்பை பிரச்சனைகளை தவிர்க்கவும், நாட்டு மருந்துகளை நம்முடைய முன்னோர்கள் கொடுத்து வந்தார்கள். அவற்றில் இன்றும் நடைமுறையில் உள்ள மருந்துகளையும் செய்யும் முறைகளையும் கீழே காண்க.
இப்படி செய்வதால் பெண்கள் உடம்பில் தேவையான புரதச் சத்து, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து அனைத்தும் ஒருசேர கிடைக்கிறது. இதனை தொடர்ந்து ஏழு நாட்கள் செய்வதால் அவர்கள் உடல் இயற்கையிலேயே மிக வலிமை வாய்ந்ததாக எந்தவொரு நோய்த்தொற்றும் அதிகம் பாதிக்காதவாறு வழு பெறுகிறது. கருப்பை ஆரோக்கியத்திற்கும் மிகவும் உகந்தது
இந்த உளுந்தங்களியை 9 வயதிலிருந்து 60 வயது வரை யார் வேண்டுமானாலும் உண்ணலாம். இதனுடன் வெந்தயத்தை அதிகமாக்கி வெந்தயக்களி ஆகவும் உட்கொள்ளலாம். வாரத்தில் 2-3 முறையாவது எடுத்து கொள்வது மிகவும் பயனளிக்க வல்லது.
அந்தப் பொடியை அடிக்கடி உணவுடன் ஏதேனும் ஒரு வகையில் நல்லெண்ணை கலந்து சேர்த்துக் கொள்ளலாம். இட்லி, தோசை போன்ற காலை உணவுடன் இந்தப் பொடியை அதனடன் எண்ணெய் சேர்த்து தொட்டு சாப்பிடலாம்.
ஒரு பெண் குழந்தை 9 வயதிற்குப் பிறகு கண்டிப்பாக அவர்களுடைய உணவில் மிக அதிகமான இரும்புச்சத்து, கால்சியம் சத்து , புரதச்சத்து உள்ள உணவு வகைகளையும் கண்டிப்பாக தினம்தோறும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்ட குறிப்புகள் அல்லாமல் மற்ற உணவுப் பொருட்கள் ஆகிய காய்கறி, பழங்கள், கீரைகள், உலர் பழங்கள், அசைவ உணவுகள் மற்றும் அனைத்து சத்துமிக்க உணவு வகைகள் அனைத்தையும் சரி விகிதமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்ட இந்த நான்கு பழக்கங்களும் இன்றும் பல குடும்பங்களில் தொன்று தொட்டு பல தலைமுறைகளாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால் இந்தப் பெண்களுக்கு பிற்காலத்தில் கருப்பை சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகளும் வராமல், அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் நன்கு பக்குவப்பட்டு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். குழந்தைப்பேறு எந்த ஒரு குறையும் இல்லாது கிடைக்கப் பெறுகிறது. குழந்தை பெற்றப் பின் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தாயும் சேயும் நலமுடன் இருக்க இவ்வகையான பழங்கால உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நாம் நிச்சயமாக பயன்பெறலாம்.
1 Comment