Eating Habits – 4: Tips for Night Shift
Healthy Eating Habits for Night Shift Workers Working ...
அதிகம் அறியப்படாத மிக அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை விழுதி.
சில ஆலயங்களில் தல விருட்சமாக விளங்கும் இந்த மூலிகையை அதிகமாக வேறெங்கும் பார்க்க முடியாது. நம் நாட்டில் அருகி வரும் தாவர இனமாக உள்ள
இதன் தாவரவியல் பெயர்: கடபா ஃப்ரடிகோசா – Cadaba Fruticosa
தனித் தனியான இலைகளையும், இள வெண்ணிற மலர்களையும், சிவப்பு வண்ணக் கனிகளையும் கொண்ட விழுதி மரம், சிறு செடி வகையைச் சேர்ந்ததாகும். விளசசி மரம் எனவும் ஒரு பெயர் உண்டு.
விழுதி மரத்தின் கனிகள் சிவந்த நிறத்தில், சுவையாக இருக்கும். மேலும், இதன் நறுமணம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த காரணங்களுக்காக, இன்று உலகின் பல இடங்களில் நறுமணத்துக்காக வளர்க்கப்படுகின்றன,
இலை,காய், வேர்கள் என இச்செடியின் பலதும் அதிக மருத்துவ பலன்கள் தருபவை.
வாத நோய்கள்
வீக்கங்கள், கட்டிகள்
குழந்தைப்பேறு இல்லாமை
சளி, காய்ச்சல், இருமல்
கை கால் இடுப்பு வலி
உடல் அசதி
சுருக்கமாகச் சொன்னால் உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரு மருந்தாகிறது.
வழக்கமான எச்சரிக்கை-
இது ஒரு நலவாழ்வுக் குறிப்பு அல்ல. செடி, மரம் ,கொடிகளை மூலிகைகளாக அறிமுகபடுத்வே இந்தப்பதிவு. தகுந்த, அனுபவம் வாய்ந்த மருத்தவரைக் கலக்காமல் மருந்தாகப் பயன்படுத்த வேண்டாம்.
M.Sc. 1. Yoga 2. Varma and Thokkanam Science 3. Memory Dev and Psycho Neurobics
P.G.Diploma in Pancha Karma Therapy
Diploma in Acupuncture
1 Comment