நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுண்டைக்காய், காய்கறிகளுள் மிகவும் சிரியதாகும். பல நாட்டு மருந்துகள் செய்யவும் மற்றும் சமையலிலும் வெகுவாக பயன்படுத்தலாம்.
சுண்டைக்காயின் பயன்கள்
சுண்டைக்காயில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைய உள்ளது. இதில் வைட்டமின் எ ,வைட்டமின் சி ,மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளது.
சர்க்கரை நோய்,இரத்தக்கொதிப்பு ,இரத்த சோகை உள்ளவர்களுக்கு சுண்டைக்காய் ஒரு அருமருந்து.
இது இரத்த சிகப்பு அணுக்களை அதிகரிக்க உதவும்.
குடல் புண்ணை ஆற்றக்கூடியது. இன்ன பிற பல வயிறு சம்மந்தப் பட்டமான பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல மருந்தாக பயன்படுத்தலாம்
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் வெந்தயம் ,கடுகு ,சோம்பு சேர்த்து பொரிய விடவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி மசிந்த பின் எடுத்து வைத்த மிளகாய்,மஞ்சள்,தனியா தூள் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
பிறகு சுண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூன்று நிமிடம் வரை கொதிக்க விடவும்.
கொதித்த பின்பு எண்ணெய் திரிந்து மேலே வரும் சமயத்தில் புளி, பெருங்காயம், சாம்பார் பொடி சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து புளியின் பச்சை வாசனை போன பின், இறக்கும் சமயம் சிறிது வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கவும். அலாதி சுவையுடனான செட்டிநாடு பச்சை சுண்டைக்காய் தொக்கு தயார்.
சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம். மாறாக, தயிர் சாதம்,சாம்பார் சாதம் தொட்டு கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
1 Comment