பாட்டி வைத்தியம் – முகம்,சருமம் பொலிவுடன்  ஜொலிக்க

முகம்,சருமம் பொலிவுடன்  ஜொலிக்க

செய்முறை:

தூய்மையான தேங்காய் எண்ணெய் 100 – 150 மில்லி லிட்டர் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்,பின்பு அதனை வாணலியில் வைத்து நன்கு காய்ச்சவும்.

இந்த எண்ணெயுடன்  நன்கு கழுவி சுத்தம் செய்த ஒரு துருவிய கேரட்டை சேர்த்து மேலும் சிறிது நேரம் கடாயில் வைத்து நன்கு காய்ச்சவும்.

10-15 நிமிடங்கள் நன்கு காய்ச்சிய இந்த எண்ணையை எடுத்து குளிர விடவும். குளிர்ந்த எண்ணெயை எடுத்து மஸ்லின் துணியில் நன்கு வடிகட்டி பின்பு பயன்படுத்தலாம்.

Read about – முக விசீகரம் பெற (வயது 18 முதல்)

பயன்கள்:

தேங்காய் எண்ணெய் இயற்கையிலேயே தோலுக்கு நல்ல ஒரு மினுமினுப்பையும் தேவையான ஊட்டச்சத்துகளையும் தரவல்லது. கேரட்டில் உள்ள விட்டமின் A மற்றும் C நம் தோலில் உள்ள மெலனினை கட்டுப்படுத்தி இயற்கையான நிறமும் ஜொலிஜொலிப்பும் கொடுக்கிறது.

இந்த எண்ணெயை நம்முடைய தேகத்திற்கு பயன்படுத்தும் பொழுது நம்முடைய தேகம் நல்ல ஒரு பளபளப்பு தன்மையையும் இயற்கையான மினுமினுப்பு தன்மையையும் பெறுகிறது. அதுமட்டுமல்லாது நல்ல ஒரு நிறத்தையும் கொடுக்கிறது.

பயன்படுத்தும் முறை:

இந்த எண்ணெயை தினமும் முகம், கை ,கால் மற்றும் உடல்முழுக்க தேய்த்து பயன்படுத்தலாம். தினமும் இப்படி பயன்படுத்தினால் 3-4 மாதங்களிலேயே நல்ல ஒரு பலனை காணலாம்.

பின்குறிப்பு:

வடிகட்டிய எண்ணெயை நன்கு காய்ந்த ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து பயன்படுத்தினால் நீண்டநாள் பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்துவதால் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லை.

Read about – தலை முடி நன்கு செழித்து அடர்த்தியாக வளர

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook

Share This Article

Related Post

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)