தேங்காய் எண்ணெய் இயற்கையிலேயே தோலுக்கு நல்ல ஒரு மினுமினுப்பையும் தேவையான ஊட்டச்சத்துகளையும் தரவல்லது. கேரட்டில் உள்ள விட்டமின் A மற்றும் C நம் தோலில் உள்ள மெலனினை கட்டுப்படுத்தி இயற்கையான நிறமும் ஜொலிஜொலிப்பும் கொடுக்கிறது.
இந்த எண்ணெயை நம்முடைய தேகத்திற்கு பயன்படுத்தும் பொழுது நம்முடைய தேகம் நல்ல ஒரு பளபளப்பு தன்மையையும் இயற்கையான மினுமினுப்பு தன்மையையும் பெறுகிறது. அதுமட்டுமல்லாது நல்ல ஒரு நிறத்தையும் கொடுக்கிறது.
பயன்படுத்தும் முறை:
இந்த எண்ணெயை தினமும் முகம், கை ,கால் மற்றும் உடல்முழுக்க தேய்த்து பயன்படுத்தலாம். தினமும் இப்படி பயன்படுத்தினால் 3-4 மாதங்களிலேயே நல்ல ஒரு பலனை காணலாம்.
பின்குறிப்பு:
வடிகட்டிய எண்ணெயை நன்கு காய்ந்த ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து பயன்படுத்தினால் நீண்டநாள் பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்துவதால் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லை.
1 Comment